இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்று இரு நாடுகளும் சேர்ந்து கொண்டாடும் ஒரே நபர் அல்லாமா இக்பால் தான்…
தனது உருது மற்றும் ஃபார்சி மொழி கவித்திறனால் பல்வேறு சுதந்திர புரட்சிகளை விதைத்தவர்…
தேசபக்தி ஊட்டியவர்…
கவிப்பசியை போக்கியவர்…
என அடுக்கி கொண்டே போகலாம்…
இப்படிப்பட்ட பேரறிஞர் இக்பால் அவர்கள் ஃபார்ஸி மற்றும் உருது கலந்து எழுதிய ஒரு நெடிய கவிதைக்கு முஸ்லிம்கள்,உலமாக்கள் என பலரும் கொந்தளித்து அவருக்கு எதிராக ஃபத்வா வழங்கப்பட்டது தெரியுமா ??
அப்படி அவர் என்ன எழுதிட்டாரு ??
வாங்க பார்ப்போம்…
1909 ஆம் ஆண்டு ஷிக்வா (Shikwa) என்ற பெயரில் ஒரு கவிதையை வெளியிட்டார் அல்லாமா இக்பால்…
அதாவது ஷிக்வா என்றால் Complaint என அர்த்தம்…
யாரு மேல Complaint தெரியுமா…??
இறைவன் மேலே…
ஆமாங்க ஒவ்வொரு வரியிலும் இறைவனை கேள்வி கேப்பாரு பாருங்க…
படிக்க படிக்க என்னாய்யா இந்தாளு இப்படி எழுதியிருக்கிறார் அப்படின்னு தோணும்…
அதே நேரம் இறைவனை பார்த்து கரெக்டா தானேங்க கேக்குறாரு மனுஷன் அப்படின்னு சொல்லவும் தோணும்…
சில வரிகளை சொல்லுறேன் கேளுங்க…
ஓ இறைவா…உனை நேசித்தவர்களின் குறைகளை கேள்…
உனை புகழ்ந்த உதடுகளின் சோக கதையை கேள்…
நாங்கள் வருவதற்கு முன்பு உன் நிலை தான் என்ன…??சிலர் கல்லை வணங்க சிலர் மரத்தை வணங்க…
உன் நிலை தான் என்ன ??
உன் பெயரை கூறுவோர் யாருமில்லா நேரத்தில்…முஸ்லிம்களின் வீரமும் அறமும் தானே உனை புகழ்ந்தது…!
இதே உலகில் யூதனும் வெள்ளையனும் சீனனும் சல்ஜுக்கும், இரானியனும் இருந்தான்…உன் பெயரை சொல்லி வாளை எடுத்தது யாரோ ??
வழிதவறியோரை உன் வழிக்கு கொண்டு வந்தது யாரோ…??
அநியாயம் என்ன தெரியுமா ?உன்னை எதிர்பவனுக்கு மதுவும் மாதுவும் செல்வமுமாம்…
ஆனால் எங்களுக்கு வெறும் சுவனத்து அழகிகளின் வாக்கு மட்டும் தானாம்…
இப்படி பல வரிகள் இறைவனுக்கு எதிராய்…
கவிதைகள் வெளிவந்த உடன் பலரும் எதிர்ப்பு…
சில உலமாக்கள் இக்பால் காஃபிர் என்றே ஃபத்வா வழங்கியதாக சிலர் கூறுவதுண்டு…
அன்போடு கவி பாட அழைத்தவர்கள் எல்லாம் “அய்யோ இக்பாலா? வேண்டாம்…” “அதிகாரத்தை கேள்வி கேட்டவர்…
ஒரு படி மேலேறி இறைவனையே கேள்வி கேட்கிறாரே” என்று அங்கலாய்த்து கொண்டனர்…
வருடங்கள் சென்றது…
1914 ஆம் ஆண்டு கிலாஃபத் இயக்கத்திற்கு பணம் வசூலிக்க வேண்டும் என்ற நிலை வந்த போது ஒரு கவி எழுத யோசித்தார்…
தன் மேல் இருக்கும் கரையை போக்கவும் நினைத்தார் இக்பால்…
ஷிக்வா விற்கு இறைவன் பதில் எழுதும் விதமாக ஒரு கவி எழுதினார்…
அதற்கு “ஜவாபே ஷிக்வா” என்று பெயர் வைத்தார்…
அதாவது “Reply to a Complaint…”
அதில் இறைவன் தன் அடியானின் (இக்பாலின்) கேள்வியை புகழ்ந்தும், கேள்வி கேட்ட விதத்தை, தைரியத்தை புகழ்ந்தும்…
பிறகு முஸ்லிம்கள் செய்யும் அனாச்சாரங்கள், சண்டைகள், ஒற்றுமையின்மை என்று ஒவ்வொரு கேள்விக்கும் இறைவன் பதில் அளிப்பது போல தனது கவியை அமைத்தார் இக்பால்…
ஜவாபே ஷிக்வா வெளிவந்த பிறகு அல்லாமா இக்பால் மீதிருந்த கறை கறைந்தது மட்டுமல்லாமல் அவரது புகழ் மற்றும் கவித்திறன் மீதிருந்த மரியாதை மேலும் கூடியது…
உருது கவி உலகின் முதுகெலும்பாக இன்றும் திகழ்கிறார் சுதந்திர புரட்சி கவி அல்லாமா இக்பால்…
உருது மொழி நம் தேசத்திற்காற்றிய பங்கு அளவில்லாதது…
உருது மொழியை காக்கும் பொறுப்பும் கடமையும் நமக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியருக்கும் உள்ளது…
இது போன்ற புத்தகங்களை நாமும் வாங்கி படிக்க வேண்டும், நம் பிள்ளைகளுக்கும் வாங்கி கொடுக்க வேண்டும்…
வாணியம்பாடி நகரத்தில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை தேசிய உருது புத்தக கண்காட்சி மற்றும் அது சம்மந்தபட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது…
அனைவரும் அணி திரண்டு செல்வோம்…அழிந்து வரும் உருதுவை காப்போம்…
– ஆம்பூர் சல்மான்

Good article about allama Iqbal